இதழ் விரித்து முகஞ்சிரிக்க
பூவாய் மலரும் கன்னக்குழியழகி நீ!
ஓரப்பார்வை பார்க்கையிலே
உருண்டோடும்
கோழிக்குண்டு கண்ணழகி நீ!
வளைந்து நெளிந்த
உன் புகைப்படம்
மழை நேர வண்ண மயில் ஆட்டம்!
எம் கவிச்சோலையில்
உனக்கென ஓர் பூங்கொத்து
பொறுமை காத்துக் கேளடி!
கடைக்கண் பார்வை அழகு!
கன்னக்குழி அழகு!
முட்டை கண்கள் அழகு!
ஒய்யார நடை அழகு
ஓயாத பேச்சு அழகு!
தலை கவிழ்ந்து வெட்கம் அழகு! – பார்த்ததில்லை நான்
காத்திருக்கிறேன் கண்கொண்டு காண!
பூமகளே நீ வாடும் நேரமெல்லாம்
நீர் தெளிக்க நான் இருப்பேன்!
மதியழகே நீ மெலிந்தால்
மணியடிக்கட்டும் என் கைபேசி
மனமகிழ்விக்க நான் இருப்பேன்!
மேகம் பிழிந்து
இவள் தாகம் தணிப்பாள் !
கோடை தழல் போக்க
குடை நிழல் தருவாள்!
இத்’தரு’மகள் குளிரும்படி
கவிதை தூவினேன் கேளடி!
– குமரேசன் செல்வராஜ்