Posted in கட்டுரைகள்

பராசக்தி: அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைத் தேடச் சொல்லும் ஒரு ஆவணக் குரல்

சமீபத்தில் வெளியாகி இருக்கும் “பராசக்தி” திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படைப்பு மட்டுமல்ல; அது மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு. இந்தப் படத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை, மாணவர்களுக்குச் சிறப்புத் திரையிடல்களை ஏற்பாடு செய்யவும் முன்வர வேண்டும்.

தணிக்கைத்துறையால் சில காட்சிகள் அல்லது வசனங்கள் நீக்கப்பட்டிருந்தாலும், படத்தின் அடிப்படை அரசியல் வீரியம் எள்ளளவும் குறையவில்லை என்பது பாராட்டுக்குரியது.

Continue reading “பராசக்தி: அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைத் தேடச் சொல்லும் ஒரு ஆவணக் குரல்”
Posted in Uncategorized

சீதாரே ஜமீன் பர் | Sitaare Zameen Par

இந்த சமூகத்தில் ‘சாதாரணமானவர்கள்’ யார் என்பதை நாம் எப்படி தீர்மானிக்கிறோம் என்பதைப் பற்றிய ஆழமான கேள்வியை சீதாரே ஜமீன் பர் திரைப்படம் எழுப்புகிறது. ஒருவரைப் பைத்தியம், குள்ளம், கருப்பு என நாம் சொல்லும்போது, உண்மையில் நாம் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு தனிநபரும் தனித்துவமானவர்கள், ஏன் நாம் இப்படி ஒப்பிட வேண்டும்?

Continue reading “சீதாரே ஜமீன் பர் | Sitaare Zameen Par”
Posted in நூல் மதிப்புரை

அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்  | நூல் அறிமுகம்

சில புத்தகங்கள் நம்மை ஆழமான ஒரு நதிக்குள் அழைத்துச் செல்வது போல இருக்கும். கரைக்குத் திரும்ப முடியாமல், அதன் நீரோட்டத்திலேயே மூழ்கிப் பயணிப்போம். கே.ஆர். மீராவின் ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ அத்தகைய ஒரு பயணம். இது வெறும் வார்த்தைகளால் உருவான கதை அல்ல; ஒரு பெண்ணின் ரத்தமும் சதையுமான வலிகள், ரகசியமான உணர்வுகள் மற்றும் அவளது ஆழ்மனப் போராட்டங்களை மிக நுட்பமாகக் காட்டுகிறது. மனித சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமமாகப் படைக்கப்பட்டாலும், ஒரு பாலினம் மற்றொன்றுக்கு இழைக்கும் வன்முறைகள் எண்ணற்ற வழிகளில் தொடர்வதை இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழும் கொடுமைகளின் சுவடுகள், அவளது வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது, எப்படி அவளது முடிவுகளையும் உறவுகளையும் வடிவமைக்கிறது என்பதை நாவல் மிகத் தெளிவாகப் பேசுகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அழகான மொழிபெயர்ப்பு, அந்தக் கதையின் ஒவ்வொரு வலியையும் நம் மனதுக்குள் ஆழமாகப் பதிய வைக்கிறது.

Continue reading “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்  | நூல் அறிமுகம்”
Posted in Uncategorized

நினைவுகளின் கரையோரத்தில்!

பலவற்றை மறக்கும் எனக்கு, மனிதர்களின் நினைவுகள் மட்டும் என்றும் நிலைத்து விட்டன. மனது முழுக்க பழைய நினைவுகளால் நிரம்பி வழிகிறது. சில சமயம் அந்த நினைவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன, சில சமயம் வருத்தத்தைத் தருகின்றன. மகிழ்ச்சியான தருணங்கள் கூட இப்போது இல்லை என்ற ஏக்கத்தை மனதில் விதைத்துவிடுகின்றன.

நண்பர்களுடன் கூட இருப்பேன்; ஆனாலும் அந்த அகன்ற கூட்டத்தில் கூட தனிமை என்னைச் சுற்றிக்கொள்கிறது. ஒரு காலத்தில், தொழிலில் முன்னேற வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிய நாட்கள் இருந்தன. அந்த கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தைத் தந்தது. ஆனால், அதே காலகட்டத்திலிருந்த நண்பர்கள், உறவுகள், என் மனதிற்கு நெருக்கமானவர்கள், என அனைவரும் சற்றே விலகிவிட்டனர். சில சமயங்களில், நாம் செய்தது தவறோ, அல்லது உறவுகளுக்கு நாம் தகுதியானவர்கள் இல்லையோ என்று கூட யோசித்ததுண்டு.

Continue reading “நினைவுகளின் கரையோரத்தில்!”
Posted in கட்டுரைகள், நூல் மதிப்புரை

லஜ்ஜா அவமானம் | நூல் அறிமுகம்

தஸ்லிமா நஸ்ரினின் “லஜ்ஜா” (அவமானம்) ஆழமான மற்றும் துணிச்சலான, ஒரு வங்க மொழி புதினமாகும். இந்த நூலை வங்கதேசத்தை ஒதுக்கிவிட்டு ஒரு சின்ன திரிபு செய்தால், இங்கே வலதுசாரிகளுக்கு இதை வைத்து எப்படி நாம் பாதிக்கப்படுகிறோம் என்று மக்களைத் தவறாக தூண்டக்கூடிய அளவுக்கு sensible ஆக இருக்கிறது.

மத சகிப்புத்தன்மை இல்லாமை, வகுப்புவாத வன்முறை மற்றும் சமூகப் பிளவுகளின் மனித குலத்திற்கு ஏற்பட்ட விளைவைக் கருப்பொருள்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிற இந்த நாவல் 1992 இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்கு எதிரான பின்னணியில் வங்கதேசத்தில் நடைபெற்ற விளைவுகள், வங்கதேசத்தில் மத துன்புறுத்தல் மற்றும் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையிலான வன்முறை எவ்வாறு இருந்து வருகிறது என்பதை வெளிச்சமிடுகிறது.

Continue reading “லஜ்ஜா அவமானம் | நூல் அறிமுகம்”
Posted in கட்டுரைகள், நூல் மதிப்புரை

துப்பட்டா போடுங்க தோழி | நூல் அறிமுகம்

துப்பட்டா போடுங்கள் தோழி இந்த சொற்றொடரை நிறைய முகநூல் பதிவுகளில் நாம் பார்த்து இருப்போம் அத்தகைய சொல்லாடல்கள் பின்னால் இருக்கக்கூடிய ஆணாதிக்க சிந்தனைகளை நாம் பெரிதாய் கண்டுகொள்வதில்லை, தன் சாதியை மதத்தை அதன் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்ளக் கிடைக்கப்பட்ட ஒரு கருவியாகவே பெண்ணும் பெண்ணை சுற்றிய இயக்கங்களும் நடைபெறுகின்றன, மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாகப் பல பங்கு வகிக்கும் பெண்ணுடைய சொந்த உடல் மீதும் உரிமை மீதும் அவளுக்கே உரிமை இல்லாமல் செய்துவிடுகிறது இந்த சமுதாயத்தின் கற்பிதங்கள்.

Continue reading “துப்பட்டா போடுங்க தோழி | நூல் அறிமுகம்”
Posted in சமூக பொறுப்புக்கள்

How Human Actions Impact Natures Delicate Balance

Humans are natural migrants. The first human life began in Africa, and since then, humans have migrated and adapted to various ecological regions, shaping civilizations through their movement.

Take Tamil as an example; its historical footprints extend from the Indus Valley to Keezhadi, covering the expanse from Sindu Veli to the banks of the Vaigai.

After the Agricultural era of the sapiens, humans began defining boundaries, which unfortunately led to the subjugation of women, confining them to homes while men engaged in trade. This period also saw the birth of religions, and the rest is history.

Let’s explore the evolution from migration to travel and tourism. While they share similarities, there are significant differences between the two.

Continue reading “How Human Actions Impact Natures Delicate Balance”
Posted in நூல் மதிப்புரை

நகலிசைக் கலைஞன் | நூல் அறிமுகம்

2019 ஏதோ ஒரு நன்நாளில் youtube பக்கத்தில் கரு.பழனியப்பன் அவர்களின் பேச்சைக் கேட்க அப்போது அறிமுகமானது தான் இந்த நகலிசைக் கலைஞன் என்ற புத்தகம் அன்றிலிருந்து அந்தப் புத்தகத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் புத்தகத் திருவிழாவிலோ அல்லது மாதாந்திர புத்தகம் வாங்கும் பொழுது நினைவில் வருவதே இல்லை கடைசியாக மே மாதம் 2023 ஆம் ஆண்டு சம்பளம் கைக்கு வந்ததும் புத்தகம் வாங்கக் கிளம்பிய நேரம் முகநூலில் ஜான் சுந்தரே டேக் செய்து இந்த புத்தகத்தைப் பற்றிப் பதிவிட்டிருந்தார்கள்.

அதே நேரத்தில் புத்தகக் கடையிலும் என் கண்ணில் பட்டது உடனே வாங்கி விட்டேன் கையிலிருந்த புத்தகங்களைப் படித்துவிட்டு இந்த புத்தகத்தை எடுத்த நான்கு நாட்களில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் எடுத்து எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த youtube காணொளியில் கரு பழனியப்பன் சொன்ன அந்த கிட்டாரிஸ்ட் அந்த பேருந்தில் ஓடிய பாடல் ஆகியவை எந்த தலைப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் வாசிக்கத் தொடங்கினேன்.

Continue reading “நகலிசைக் கலைஞன் | நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

ஒளிரும் நூலின் கடைசி இழை | நூல் அறிமுகம்

இக்கவிதை நூலைக் கையில் எடுத்த போது கடந்த ஐந்து மாத கால நினைவுகள் மனதில் வந்து ஒட்டிக்கொண்டன, எப்போதேனும் சந்தித்துச் செல்லும் மனிதர்களிடம் நாம் உரையாடியதோ அவர்களுக்குப் பிடித்தது எனச் சொல்லிச் சென்ற விடயங்களும் நம் கண்ணில் படும்போது அவர்களின் நினைவுகள் நம்மைச் சீண்டிச் செல்லும். எனக்கு இன்னும் சற்று அதிகமாய் அந்தக் காலத்தில் நான் இருந்த நினைவுகள் மற்றும் உணர்வுகளையும் பெறச்செய்யும். இதனைக் கருவாகக் கொண்டது தான் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் கவிதை.

Continue reading “ஒளிரும் நூலின் கடைசி இழை | நூல் அறிமுகம்”