மண் வாசம் நிரம்பி செல்கிறதுகாதுமடல்கள் வருடி கடந்த காற்று!கடந்த காற்றின் ஓசையோதென்றலின் தெம்மாங்காய் இனிக்கிறது!மலரை நுகரும் பட்டாம்பூச்சி,உடலை உலுக்கும் காகம்,மழைக்கு ஒதுங்கிய செம்மறி ஆட்டு மந்தை,தோகை விரித்தாடும் மயில்,கொஞ்சி விளையாடும் அணில்,அதே குளிர்,அதே காற்று,நீ தான் இல்லை!இத்தனையும் நேசிக்கிறேன்நீளம் வெளுத்த வானைவாசல் பள்ளத்தில் பார்த்துகாலுக்கடியில்மறுகுகிறது மனதுமற்றுமொரு மழைக்காய்வானத்தைப் பிரிந்த மழை சொல்லும்ஆறுதலாய் மரத்திலிருந்து விழும் தூறலின்சொத் சொத் என்ற சத்தம்!உனக்கேதும் சொல்லியதா இந்த மழைஅங்கே!
– குமரேசன் செல்வராஜ்