Posted in கவிதைகள்

உனக்கேதும் சொல்லியதா இந்த மழை!

மண் வாசம் நிரம்பி செல்கிறது
காதுமடல்கள் வருடி கடந்த காற்று!
 
கடந்த காற்றின் ஓசையோ
தென்றலின் தெம்மாங்காய் இனிக்கிறது!
 
மலரை நுகரும் பட்டாம்பூச்சி,
உடலை உலுக்கும் காகம்,
மழைக்கு ஒதுங்கிய செம்மறி ஆட்டு மந்தை,
தோகை விரித்தாடும் மயில்,
கொஞ்சி விளையாடும் அணில்,
அதே குளிர்,
அதே காற்று,
நீ தான் இல்லை!
 
இத்தனையும் நேசிக்கிறேன்
நீளம் வெளுத்த வானை
வாசல் பள்ளத்தில் பார்த்து
 
காலுக்கடியில்
மறுகுகிறது மனது
மற்றுமொரு மழைக்காய்
 
வானத்தைப் பிரிந்த மழை சொல்லும்
ஆறுதலாய் மரத்திலிருந்து விழும் தூறலின்
சொத் சொத் என்ற சத்தம்!
 
உனக்கேதும் சொல்லியதா இந்த மழை
அங்கே!
– குமரேசன் செல்வராஜ் 

Author:

கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய் குமரேசன் செல்வராஜ்.

Leave a comment