Posted in கட்டுரைகள்

நான் அதிர்ஷ்டசாலி அல்ல ஆசிர்வதிக்கப்பட்டவன்.

13041453_1121465307914362_7865432606216842137_oவாழ்க்கை எனக்கு வசதிகளை தரவில்லை..,
வாய்ப்புகளை தரவில்லை,
அதிர்ஷ்டத்தை தரவில்லை,
அது எனக்கு தந்தவை எல்லாம் எந்த நிலையிலும் மனம் தளராது உழைக்கும் ஊக்கமும்,
எனக்கான வாய்ப்பை நானாக உருவாகிக்கொள்ளும் திறமையும்,
எந்நேரமும் என்னை ஆசிர்வதிக்கும் பெற்றோர்கள் மட்டும்தான்…

#இது_போதும்_எனக்கு_இன்னும்_நூறு_ஜென்மம்_இம்மண்ணில்_வாழ்ந்திட

– குமரேசன் செல்வராஜ்

 

Posted in கவிதைகள், சமூகம்

காகித கப்பலும் கட்டுமரமாகும்!

Jumpசமூகம் என்னும் சமுத்திரத்தில்

வேலை என்னும் முத்தை தேட…

படித்த பட்டத்தில் காகித கப்பல் செய்து

முயற்சி என்னும் துடுப்பை போட்டேன்

காலம் என்ற காற்று புயலாய் தாக்க

குழப்பம் என்னும் சுழல் என்னை சாய்க்க

திறமை என்னும் மைத்துனன் வலுவில்

காகித கப்பலும் கட்டுமரமானது

தேடிய முத்தும் கையை எட்டியது

வெற்றி என்னும் கரையும் என்னை ஈர்த்தது!

signature

Posted in கவிதைகள், காதல்

முட்டாளனேன் அக்கணம்!

3a112151e31cd9d4b45b4cf4e844a327-d36fgkoஇரவின் மடியில் உறங்க முடியாமல் தவிக்கிறேன்

உன் மடியில் சாய்ந்த நினைவுகளோடு!

என் இரவின் இருள் அனைத்தையும்

உன் கூந்தலாய் கண்டேன் இனிமையில் …

இன்றோ ஏங்கிக் கிடக்கிறேன் எனக்கான

இருளைத்தேடி தனிமையில்!

கானல் நீரில் மீன்கள் ஏது, என கேலி செய்கிறது

நாம் அமர்திருந்த நதிக்கரைகள்!

முள்ளாக குத்திச் சென்று முட்டாளாக்கியது

அன்று நம்மை தீண்டிய தென்றல்!

தினங்களில் இல்லை முட்டாள் தனம்

உன் நினைவை மறக்க மறுத்த என் மனம்

அதுவே என்னை மாற்றியது அக்கணம்!

– குமரேசன் செல்வராஜ்