உன் போல் ஓர் நண்பனை இனி
என் வாழ்வில் காணமுடியாமல் செய்துவிட்டாய்,
சேர்ந்து செய்த சேட்டைகளும் ,
அதற்கு வாங்கிய தண்டனைகளும் இன்னும் என் மனதில்,
நீங்காத நினைவுகளை தந்த நீ ஏன் இவ்வுலகை விட்டுப்போனாய்
இனி ஒருவன் தரமுடியுமா உன்னோடு வாழ்ந்த என் நாட்களை
மீண்டும் பிறந்து வா என் நண்பனே, இவ்வுலகை நாம் ஆழ்வோம் சேர்ந்து.
என்றும் உன் நினைவுகளோடு தனிமையில் நான்…
– குமரேசன் செல்வராஜ்